
புதுடெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் 86வது கூட்டம் கடந்த 12ம் தேதி டெல்லியில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதன் தலைவர் வினீத் குப்தா நடத்தினார். இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களின் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து கூட்டத்தின் முடிவில், காவிரியில் இருந்து மேலும் 15 நாட்களுக்கு, அதாவது வரும் 27ம் தேதி வரையில் வினாடிக்கு 5000 கன அடி என்ற வீதம் தமிழ்நாட்டுக்கு, கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இதைத்தொடந்து மேற்கண்ட உத்தரவின் பரிந்துரையும் காவிரி ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை மதிக்காமல் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவின் பேரில், காவிரி ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
The post டெல்லியில் இன்று காவிரி ஆணைய அவசர கூட்டம் appeared first on Dinakaran.