×

பைக்கில் லிப்ட் கேட்டு ஏறி அட்டகாசம் தாந்தோணிமலையில் சுகாதார மாதிரி பூங்காவை சீரமைக்க கோரிக்கை

கரூர்: சுகாதார மாதிரி பூங்கா வளாகத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பூமாலை வணிக வளாகம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார மாதிரி பூங்கா வளாகம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தேவைக்கு ஏற்ப கழிப்பறைகளை எவ்வாறு, எந்தெந்த வகைகளில் அமைத்துக்கொள்வது எப்படி, அதன் வகைகள் என்ன என்பது குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த சுகாதார மாதிரி பூங்கா வளாகம் அமைக்கட்டது. பொதுமக்கள் அந்த சமயத்தில் நேரில் வந்து பார்வையிட்டு சென்றனர். இந்நிலையில் அந்த பூங்கா வளாகம் பராமரிப்பின்றி தற்போது மிகவும் மோசமடைந்துள்ளது. பூங்காவின் உட்புறம் அமைத்து தரப்பட்டுள்ள மாதிரி சுகாதார வளாகம் சிதிலடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. எனவே, இதனை திரும்பவும் சீரமைத்து அனைத்து மக்களும் வந்து பார்வையிட்ட செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேயர் துவக்கி வைத்தார்

 

The post பைக்கில் லிப்ட் கேட்டு ஏறி அட்டகாசம் தாந்தோணிமலையில் சுகாதார மாதிரி பூங்காவை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Atakasam Dandonimalai ,Karur ,Dandonimalai Poomalai ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...