×

குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2021ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட 520க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகவும், மகளிர் உரிமை தொகை ரூ.1,000 வழங்குவதன் மூலம் நூற்றுக்கு நூறு சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Edappadi Palaniswami ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய எடப்பாடி வலியுறுத்தல்