×

தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

தர்மபுரி, செப்.17: தர்மபுரி மாவட்டத்தில், தமிழ்ச்செம்மல் விருது பெற தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்துவதற்காக தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதும் ₹25 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் தகுதியுரையும் வழங்கி வருகிறது. 2023ம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு தர்மபுரி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலிருந்து விண்ணப்பங்களை இலவசமாக (www.tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்புடன் இரண்டு நிழற்படம், அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி விவரங்களுடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தர்மபுரி என்ற முகவரிக்கு வரும் அக்டோபர் 12ம்தேதிக்குள் அனுப்பப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Collector ,Shanthi ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...