×

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தராமல் ஓய மாட்டேன்: ராமதாஸ் உறுதி

சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை பெற்றுத்தராமல் ஓயமாட்டேன் என தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளர். அதில் கூறியிருப்பதாவது: வன்னியர்களுக்கு மட்டும் 10.5% இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை, அதற்கான சட்டத்தை அரசு நிறைவேற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. நியாயத்தை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வன்னியர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதை தமிழக சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் வாக்குறுதியாக அளித்திருக்கிறார். வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் நான் மீண்டும், மீண்டும் அளிக்கும் வாக்குறுதி ஒன்று தான்.பாட்டாளி மக்களான வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை வென்றெடுத்து கொடுக்காமல் ஓயமாட்டேன் என்பது தான். வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை போராட்டம் நடத்தாமல் வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகவே காத்துக் கொண்டிருக்கிறோம். சமூகநீதி நாளான செப்டம்பர் 17ம் நாளில் இட ஒதுக்கீட்டுப் போராட்ட 21 தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தராமல் ஓய மாட்டேன்: ராமதாஸ் உறுதி appeared first on Dinakaran.

Tags : Vanniars ,Ramadoss ,CHENNAI ,Bamaka ,Ramadas ,Vanniyars ,Vanniyyas ,Ramdas ,Dinakaran ,
× RELATED ராமதாஸ் வலியுறுத்தல் மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக்க வேண்டும்