
சென்னை : ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாளில் அவரது சமூகநீதிக் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியைத் தொடர உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “தனது ட்விட்டர் பக்கத்தில், “விடுதலைப் போராட்ட வீரரும், பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பணியாற்றியவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாளில் தமிழ்நாட்டுக்காகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காவும் அவர் ஆற்றிய பணிகளை நன்றியுடன் போற்றி, அவரது சமூகநீதிக் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியைத் தொடர உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post சமூகநீதிக் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியைத் தொடர உறுதியேற்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.