சாத்தான்குளம், செப். 16: சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை குமரன்விளை தெருவை சேர்ந்தவர் முருகேசன் (73). இவருக்கும், இடைச்சிவிளை அழகியவிளையை சேர்ந்த ஆறுமுகக்கண் மனைவி பிரம்மசக்தி என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. கடந்த 12ம் தேதி முருகேசன் திசையன்விளைக்கு சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். அழகியவிளை அரசு பள்ளி அருகில் வரும்போது பிரம்மசக்தி, அவரது மகன்கள் ஆதிலிங்கம் (32), மாயச்சந்திரன் (27) ஆகியோர் அவரை வழிமறித்து அவதூறாக பேசி, நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை வாபஸ் பெற வேண்டும், இல்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். மேலும் கிழே கிடந்த கற்களை எடுத்து தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த முருகேசன், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் எஸ்ஐ நெல்சன் வழக்கு பதிந்து ஆதிலிங்கத்தை கைது செய்தார். மற்ற இருவரை தேடி வருகிறார்.
The post வழக்கை வாபஸ் பெற முதியவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.
