
திங்கள்சந்தை, செப். 16: குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் புதிய ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா திங்கள்நகரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். பொது செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட துணை தலைவர் கங்காதரன், ஆலோசகர் மிசா சோமன் ஆகியோர் கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் ராஜேஸ்வரன், ஜான் கென்னடி, செயற்குழு உறுப்பினர் ராஜா மற்றும் நிர்வாகிகள் விஜயகுமார், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post இந்து முன்னணி சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா appeared first on Dinakaran.