×

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மேல்மலையனூர், செப். 16: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அமாவாசை தினத்தில், நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வடக்கு வாசல் எதிரேயுள்ள ஊஞ்சல் உற்சவ மண்டபத்தில் நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் கணேச ஜனனி அலங்காரத்தில் ஒரு நாள் முழுவதும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நள்ளிரவு பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நள்ளிரவில் நடைபெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் என லட்சக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பக்தர்களின் வருகைக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம், மேலாளர் மணி மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட அரங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

The post மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Amavasai Unchal Utsavam ,Melmalayanur Angalamman temple ,Melmalayanur ,Melmalayanur Angala Parameshwari Amman Temple ,Melmalayanur Angalaman Temple ,
× RELATED மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில்...