×

கைது விவகாரம் சந்திரபாபு நாயுடு மகன் டெல்லியில் சட்ட ஆலோசனை

புதுடெல்லி: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில், மாநில திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறி கடந்த 9ம் தேதி விஜயவாடா லஞ்ச ஒழிப்பு போலீஸ் அவரை கைது செய்தது. இதையடுத்து அவர் ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டார். வீட்டுக்காவல் கோரிய அவரது மனு கடந்த 12ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது சந்திரபாபு தரப்பில் ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யவும் ஜாமீன் கோரியும் 2 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவை அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவரது மகனும் தெலுங்கு தேசம் கட்சியின் பொது செயலாளருமான நாரா லோகேஷ் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அவர் சந்திரபாபு நாயுடு கைது விவகாரம் தொடர்பான ஜாமீன் மனு, வழக்கை தள்ளுபடி செய்வது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் சட்ட ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post கைது விவகாரம் சந்திரபாபு நாயுடு மகன் டெல்லியில் சட்ட ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Delhi ,New Delhi ,Telugu Desam Party ,
× RELATED புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான...