×

தமிழகத்தை முன்னோடியாக கொண்டு தெலங்கானா பள்ளிகளில் காலை உணவு திட்டம்: அரசாணை வெளியீடு

திருமலை: தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி, காலையிலும் உணவு வழங்கி கல்வி கற்பிக்கும் விதமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து அதனை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய தெலங்கானா அரசு, அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்பி வைத்தது.

அந்த ஆய்வின் அடிப்படையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தெலங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க உத்தரவிட்டார். வரும் அக்டோபர் 24ம் தேதி விஜயதசமி முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள காலை உணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post தமிழகத்தை முன்னோடியாக கொண்டு தெலங்கானா பள்ளிகளில் காலை உணவு திட்டம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tirumala ,
× RELATED புயல் பாதிப்பை சீர் செய்திட நிவாரண...