×

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து இருவர் உடல் சிதறி உயிரிழப்பு; காவல்துறை விசாரணை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர். நத்தம் அருகே சேத்தூர் மங்கம்மா சாலையோரம் உள்ள மாந்தோப்பில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, இருவர் உடல் சிதறி இறந்து கிடந்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற நத்தம் போலீசார், இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தது மங்கம்மா சாலையில் வசித்து வந்த ராஜா, கருப்பையா ஆகியோர் என்பது தெரியவந்தது.

மாந்தோப்பில் தார் பாயால் கூடாரம் அமைத்து காகித நாட்டு வெடிகுண்டுகளை இருவரும் தயாரித்து வந்ததும், எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் இருவரும் 20 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளும், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சுற்றுப்புறத்தில் குடியிருப்புகள் ஏதும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நாட்டு வெடிகுண்டு எதிர்காக தயாரிக்கப்பட்டது? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து இருவர் உடல் சிதறி உயிரிழப்பு; காவல்துறை விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Natham ,Dindigul district ,Dindigul ,Chettur ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...