
மதுரை: பழனியில் பல்வேறு அமைப்புகளால் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை ஒரே நாளில் கரைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்திக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பொதினிவளவன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
The post பழனியில் பல்வேறு அமைப்புகளால் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை ஒரே நாளில் கரைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு! appeared first on Dinakaran.