×

ஆந்திராவில் ஒரே நாளில் இரு வேறு இடங்களில் சாலை விபத்து…9 பேர் பலி; 10 பேர் படுகாயம்!!

ஹைதராபாத் : ஆந்திராவில் 2 வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெல்கா மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வந்தனர். சாமி தரிசனத்திற்கு பிறகு நேற்று இரவு அவர்கள் கர்நாடகாவிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அவர்களது வாகனம் அதிகாலையில் சித்தூர் – ஹைதராபாத் சாலையில் வடப்பள்ளி கிராமத்தின் அருகே சென்ற போது, கடப்பாவில் இருந்து சித்தூர் நோக்கிச் சென்ற லாரி பயங்கரமாக மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.

காயம் அடைந்த 7 பேர் திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கேவி பள்ளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல், வேலூரில் இருந்து நோயாளியை ஏற்றிக் கொண்டு திருப்பதி சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று சித்தூர்- திருப்பதி நெடுஞ்சாலையில் தெள்ளகுண்டலப்பள்ளி அருகே நிறுத்தப்பட்டு இருந்த டேங்கர் லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துவிட்டனர். பி;படுகாயம் அடைந்த 3 பேரை மீட்ட காவலர்கள் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post ஆந்திராவில் ஒரே நாளில் இரு வேறு இடங்களில் சாலை விபத்து…9 பேர் பலி; 10 பேர் படுகாயம்!! appeared first on Dinakaran.

Tags : accident ,Andhra Pradesh ,Hyderabad ,Karnataka ,Belga ,
× RELATED ஆந்திர மாநிலம் தாலுவாய் பள்ளி...