×

கன்னியாகுமரியில் மதுபோதையில் ஆட்டம்போட்ட வெளியூர் இளைஞர்கள்: பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி காந்திமண்டபம் அருகே சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு மதுபோதையில் அட்டகாசம் செய்த இளைஞர்களால் சுற்றுலாப்பயணிகள் அச்சமடைந்தனர். கன்னியாகுமரி கடற்கரைக்கு சூரிய உதயத்தையும், மறைவையும் கான தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு வந்த சுற்றுலா பயணிகள் சிலர் திடீரென காந்திமண்டபம் அருகே அமைந்துள்ள காட்சி கோபுரம் அருகே தங்கள் வாகனங்களை நிறுத்தினர். அதில் இருந்த இளைஞர்கள் சிலர் சாலையில் இறங்கி நடனமாட தொடங்கினர்.

மதுபோதையில் இருந்த அந்த இளைஞர்கள் பாடலை ஒலிக்கவிட்டு நடனமாடியதால் அந்த சாலைவழியாக செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்களை பார்த்து அங்கிருந்த சுற்றுலாப்பயணிகள் அச்சமடைந்தனர். குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் அந்த இடத்தில் இருந்து வெளியேறினர். சிலமணி நேரம் தொடர்ந்து ஆட்டம் போட்ட இளைஞர்கள் பின்னர் புறப்பட்டு சென்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கன்னியாகுமரியில் மதுபோதையில் ஆட்டம்போட்ட வெளியூர் இளைஞர்கள்: பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kannyakumari ,KANYAKUMARI ,Kannyakumari Ganthimandapam ,Kannyakumari Beach ,Kanyakumary ,Dinakaran ,
× RELATED கடும் வெயிலுக்கு இடையே குமரி...