×

நாடெங்கும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பு விற்பனை மற்றும் வெடிக்க தடைவிதிக்க கோரி அர்ஜுன் கோபால், சுபாஷ் தத்தா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இவ்வழக்குகள் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பட்டாசு தயாரிப்பில் பெரியன் என்ற வேதிப்பொருள் 22 முதல் 30 சதவீதம் வரை பயன்படுத்துவதால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தற்போது சுற்றுப்புற சூழலை பாதிக்காதவாறு பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிப்படுவதாக தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.

The post நாடெங்கும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED நீட், ஜேஇஇ மாணவர்கள் தற்கொலை வழக்கு;...