×

ஓமனில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ தங்கம் உள்பட ரூ.14 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; 113 பேர் சிக்கினர்..!!

சென்னை: ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓமனில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.14 கோடி மதிப்பிலான பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று காலை ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் அதிகளவு தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தினர். நேற்று மதியம் வரை அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இருப்பினும் பயணிகள் விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை.

இந்நிலையில், துருவி துருவி விசாரணை நடத்தியதில் ரூ.14 கோடி மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 13 கிலோ தங்கம், 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள், மடிக்கணினிகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பதப்படுத்தப்பட்ட குங்கும பூவையும் ஓமனில் இருந்து கடத்தி வந்துள்ளனர். ஒரே விமானத்தில் கடத்தலில் ஈடுபட்ட 113 பேர் சுங்கத்துறையிடம் சிக்கினர். ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து நேற்று சென்னை வந்த விமானத்தில் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post ஓமனில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ தங்கம் உள்பட ரூ.14 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; 113 பேர் சிக்கினர்..!! appeared first on Dinakaran.

Tags : Oman ,Chennai ,
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!