×

₹37 லட்சத்தில் பல்நோக்கு சேவை மைய கட்டிட பணி

சேந்தமங்கலம், செப்.15: புதுச்சத்திரம் அருகே, ₹37 லட்சத்தில் பல்நோக்கு சேவை மையம் கட்டிடப் பணியை ராஜேஸ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார். புதுச்சத்திரம் ஒன்றியம், காரைக்குறிச்சிபுதூர் ஊராட்சி தாத்தையங்கார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில், ₹37 லட்சத்தில் பல்நோக்கு சேவை மையக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார அட்மா குழு தலைவர் கௌதம் தலைமை வகித்தார். நாமக்கல் ராமலிங்கம் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்று பேசினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி கலந்துகொண்டு, பணியை துவக்கி வைத்து, அப்பகுதி மக்களிடையே குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அப்போது, ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளிகளடையே அவர் பேசுகையில், ‘தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும், மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன், மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு அதிக சுழல் நிதி வழங்கி வருகிறார். உடனுக்குடனே பயிர் கடன், கறவை மாட்டு கடன் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்ட ஒரே அரசு திமுக அரசு தான்,’ என்றார். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி வெங்கடாஜலம், துணைத்தலைவர் ராம்குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆனந்தகுமார், சுசிதரன், சுப்பிரமணி, சரவணகுமார், கோமதீஸ்வரன், பிரபாகரன், விஸ்வநாதன், பாஸ்கர், மனோகரன், சுப்பிரமணி, புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ₹37 லட்சத்தில் பல்நோக்கு சேவை மைய கட்டிட பணி appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Rajeskumar ,Puduchattaram.… ,Dinakaran ,
× RELATED வயதான தம்பதியரை தாக்கி கொள்ளையடிக்க முயற்சி