நாகப்பட்டினம்,செப்.15: ‘‘அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,’’ என்பதை வலியுறுத்தி திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், மாதர் சங்க ஒன்றிய தலைவர் ஜோஸ்பின் ராணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லதா, மாவட்ட பொருளாளர் சுபாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100 நாள் வேலை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்கிட வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிக்கும், நகராட்சி பகுதிக்கும் விரிவு படுத்தி அதற்கான சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும், இடமற்ற விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
The post பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.