×

டூவீலர் மீது கார் மோதியதில் இளம்பெண் பரிதாப பலி

கீழ்வேளூர், செப்.15: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கொள்ளிகாடு கீராலத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ரோஜா (26) தனது குழந்தையுடன் நேற்று முன்தினம் கீழ்வேளூரில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு ஸ்கூட்டரில் திரும்பி கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை செல்வம் ஓட்டிச்செல்ல, ரோஜா மற்றும் குழந்தையுடன் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். கீழ்வேளூர் அருகே வெண்மணி ஆர்ச் அருகே உள்ள வளைவில் சென்றபோது, இவர்களுக்கு பின்னால் வந்த கீழ்வேளூர் ஒன்றியம் மோகனூர் ராமன் சேரி பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவர் ஓட்டி வந்த கார், ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் ஸ்கூட்டரில் அமர்ந்து வந்த ரோஜா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ளவர்கள் ரோஜாவை மீட்டு தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டார் என்று கூறினார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post டூவீலர் மீது கார் மோதியதில் இளம்பெண் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Kilivelur ,Selvam ,Kerala North Street, Thirupakikadu, Nagapattinam district ,Roja ,
× RELATED நாகை தொகுதி எம்.பி. செல்வராஜ் மறைவிற்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்