வருசநாடு, செப். 15: வருசநாடு அருகே உள்ள தர்மராஜபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி அருகே விடுதி உள்ளது. இந்த விடுதியில் வெளியூர் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் சில சமூக விரோதிகள் இரவு நேரங்களில் வந்து செல்கின்றனர். மேலும் சிலர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
இதனால் பள்ளி அருகே விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே, பள்ளி மற்றும் விடுதிக்கு இரவு நேர காவலாளி பணியமர்த்த வேண்டும், பள்ளி நுழைவுவாயிலில் புதிய கேட் வசதி அமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த பள்ளிக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளன. எனவே இந்த சாலையையும் விரைந்து சீரமைக்கவும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post வருசநாடு அரசு பள்ளிக்கு இரவு நேர காவலாளி வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.