கம்பம், செப். 15: கம்பத்தில் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை சார்பில் தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் அருந்ததியர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அதியர்மணி தலைமை தாங்கினார். பேரவை தலைவர் பிச்சை துணைச் செயலாளர் மாரியப்பன், மணிகண்டன் நகர துணைச் செயலாளர் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாதச் சம்பளம் 5ம் தேதிக்குள் வழங்க நகராட்சி நிர்வாகம் ஆவணம் செய்ய வேண்டும்.
கம்பம் நகராட்சியில் பிரச்சனைக்குரிய தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து நகராட்சி நிர்வாகம் நேரடியாக பணி வழங்க ஆவணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், பாண்டி, பழனிக்குமார், அய்யம்மாள், தோழர் தேவி, ராஜா, முருகேசன், வீரலட்சுமி, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.