×

மது குடிக்க பணம் தராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 

சென்னிமலை, செப். 15: சென்னிமலை அடுத்த ஈங்கூர் குட்டப்பாளையம் காலனியை சேர்ந்தவர் குருநாதன் மகன் சிவகுமார்(19). இவர், அதே பகுதியில் உள்ள அவரது தாத்தா வீட்டில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார். சிவகுமாருக்கு மதுப்பழக்கம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிவகுமார் மது குடிக்க தாத்தா, பாட்டியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் பணம் தர மறுத்ததால், மனவேதனை அடைந்த சிவகுமார் வீட்டிற்குள் சென்று தாழிட்டு கொண்டார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, சிவகுமார் தொட்டில் மாட்டும் கம்பியில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த அவரது தாத்தா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சிவக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சிவக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மது குடிக்க பணம் தராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennimalai ,Gurunathan ,Sivakumar ,Engur Guttapalayam ,
× RELATED பட்டம் விடும் போது தவறி விழுந்து...