×

அசல் தொகையினை செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990- 91 முதல் 2011-12 ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என தாட்கோ, மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

எனவே தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகிய திட்டங்கள் மூலம் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று திருவள்ளூர் தாட்கோ, மாவட்ட மேலாளர் மூலம் வழங்கப்படும். இத்திட்டம் வருகின்ற 31.12.2023 வரை செயல்படுத்தப்படும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post அசல் தொகையினை செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tamil Nadu Aditravidar Housing Facility and Development Corporation ,National Improvement Fund Development Corporation ,National ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்