×

மூளைச்சாவு அடைந்த வாலிபர் இதயம் தானம்

பெரம்பலூர்: சென்னை புழல் காவாங்கரையை சேர்ந்தவர் கணேசன்(32). இவரது மனைவி பத்மா(32). பத்மாவின் தங்கை சென்னை அம்பத்தூரை சேர்ந்த மஞ்சு (28). இரு குடும்பத்தினரும் மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு காரில் சென்று விட்டு கடந்த 10ம் தேதி சென்னை திரும்பி கொண்டிருந்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலுத்தூர் தாலுகா திருவளக்குறிச்சி பிரிவு சாலையில் சென்டர் மீடியனில் கார் மோதி கணேசனின் 3 மாத குழந்தை தக்சித் இறந்தது. திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணேசன், கடந்த 12ம் தேதி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர். அவரது இதயம் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

The post மூளைச்சாவு அடைந்த வாலிபர் இதயம் தானம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Ganesan ,Puzhal Kavankarai, Chennai ,Padma ,Manju ,Ambattur, Chennai ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...