×

மொராக்கோ நிலநடுக்கம்: இறந்தோர் எண்ணிக்கை 2,900யை தாண்டியது…பாதிக்கப்பட்ட மக்களுக்கு அண்டை நாடுகள் உதவிக்கரம்

மொராக்கோ: மொராக்கோ நாட்டில் கடந்த 8ம் தேதி ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2900ஐ தாண்டியுள்ளது. வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் உள்ள மாறாக்கிரிட்ச் நகரில் கடந்த 8ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.8ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் மண்மேடாகியுள்ளன.

இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்களை மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 1000க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2900ஐ தாண்டியுள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் மேலும் 1200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. மொராக்கோவில் சிறு சிறு நிலஅதிர்வுகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் 8ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மிக பயங்கரமான ஒன்றாக அந்நாட்டு மக்களால் பார்க்கப்படுகிறது.

The post மொராக்கோ நிலநடுக்கம்: இறந்தோர் எண்ணிக்கை 2,900யை தாண்டியது…பாதிக்கப்பட்ட மக்களுக்கு அண்டை நாடுகள் உதவிக்கரம் appeared first on Dinakaran.

Tags : Morocco ,earthquake ,Morocco Earthquake ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்