
ராமநாதபுரம் : நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீன் விலை வீழ்ச்சி, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 12 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், நேற்று முன்தினம் அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு கடல் எல்லை பகுதியில், மீன்பிடித்து கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 17மீனவர்களையும் 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர்.
இதில் 13 மீனவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 4 மீனவர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது என்றும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
The post அடங்காத இலங்கை கடற்படை… தொடர் அட்டூழியம்: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழ்கத்தைச் சேர்ந்த 17 பேர் கைது : மீனவர்கள் கொந்தளிப்பு!! appeared first on Dinakaran.