×

பாரதியார் நினைவு கருத்தரங்கம்

மதுரை, செப். 14: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி இணைந்து பாரதியார் நினைவு நாள் கருத்தரங்கை நடத்தியது. கல்லூரி முதல்வர் வானதி தலைமை வகித்தார். முதுகலை தமிழாய்வு துறை தலைவர் இணை பேராசிரியர் யாழ்.சு.சந்திரா வரவேற்றார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் கவிஞர் செல்லா கருத்தரங்க தொடக்க உரையாற்றினார். காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் ஆனந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு \”பாரதி ஆய்வுகள்\” தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கல்லூரி தமிழாய்வு துறை இணை பேராசிரியர் சந்தியா நன்றி கூறினார். கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பாக கவிஞர்கள் மஞ்சுளா, மலர்மகள், முத்துவேலன், பேராசிரியர்கள் முத்தையா, பாண்டி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சேகரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர். பாரதி நினைவு இலக்கிய போட்டிகளில் பரிசு பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கப்பட்டன.

The post பாரதியார் நினைவு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Bharatiyar Memorial Seminar ,Madurai ,Bharatiyar Memorial Day ,Tamil Nadu Arts and Literature Forum ,Meenakshi Government Women's College ,Dinakaran ,
× RELATED மதுரை தோப்பூரில் வழிப்பறி...