×

மருத்துவமனைக்கு வந்தவரின் பைக் திருட்டு

தஞ்சாவூர், செப்.14: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தெற்கு மலைப்பட்டியை சேர்ந்த ரத்தினவேல் மகன் விஜயராஜ் (28). இவர் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனைக்கு கடந்த 21.6.2023 அன்று வந்தார். அங்குள்ள தாமஸ் ஹால் அருகில் தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. அதிர்ச்சியடைந்த விஜயராஜ் பல இடங்களில் தேடி பார்த்தும் பைக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசில் விஜயராஜ் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை திருடிய மர்மநபரை தேடி வருகின்றனர்.

The post மருத்துவமனைக்கு வந்தவரின் பைக் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Vijayaraj ,Rathinavel ,Southern Malapatti ,Aruppukkottai ,Virudhunagar district ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...