×

ஆற்றூரில் திமுக அலுவலகம் திறப்பு

குலசேகரம்,செப்.14: ஆற்றூர் பேரூராட்சிக்குட்பட்ட தேமானூர் பகுதி திமுக அலுவலகத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஆற்றூர் பேரூராட்சி துணை தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். ஆற்றூர் பேரூர் செயலாளர் சோழராஜன், திருவட்டார் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜாண் பிரைட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ், ஆற்றூர் பேரூராட்சி தலைவர் பீனா அமிர்தராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் இராஜ், டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் திலிப்குமார், பேரூர் திமுக துணை செயலாளர் டாக்டர் செல்வின் ஞானபிரகாஷ், கவுன்சிலர்கள் பாபு, சுனிதா, ஷைலா குமாரி, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அஷ்வின் ஹென்றி, கிளை செயலாளர் ஆன்றனி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஆற்றூரில் திமுக அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Tayyur ,Kulasekaram ,Minister ,Mano Thangaraj ,Temanur ,Taiyur ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!