×

நடிகை விஜயலட்சுமிக்கு சீமானே கருக்கலைப்பு மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்தார்: வீரலட்சுமி பரபரப்பு பேட்டி

சென்னை: நடிகை விஜயலட்சுமிக்கு இயக்குனர் சீமானே கருக்கலைப்பு மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்தார் என்று கோயம்பேடு துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துவிட்டு வந்த தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர் வீரலட்சுமி பரபரப்பு தகவலை வெளியிட்டார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று சீமானை வழக்கு சம்பந்தமாக வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக கூறிய நிலையில் அவர் ஆஜராகவில்லை. அவரது வக்கீல்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை செய்துகொள்ள போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து அவருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி நேற்று கோயம்பேடு துணை கமிஷனரிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துவிட்டு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: விஜயலட்சுமி ஏழு முறை கருச்சிதைவு ஏற்படுவதற்கு சீமானே காரணம். அவர்தான் உணவில் கருச்சிதைவு மாத்திரைகளை கலந்து கொடுத்து கருச்சிதைவு செய்ய வைத்துள்ளார். சீமானுக்கு எங்கெல்லாம் சொத்து உள்ளது என்பது குறித்து ஆவணங்களை திரட்டி வருகிறோம். அதுகுறித்து உரிய நேரத்தில் புகார் அளிக்கப்படும். விஜயலட்சுமிக்கு தான் ஆதரவாக இருப்பதால் நாம் தமிழர் கட்சியினர் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருகின்றனர். வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன் தலையிட்ட பிறகு வழக்கின் நகர்வு மாறுகிறது. விஜயலட்சுமி பேச்சும் வேறு திசையில் செல்கிறது. உதவி கமிஷனர் கவுதமன் இந்த வழக்கில் தலையிடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

The post நடிகை விஜயலட்சுமிக்கு சீமானே கருக்கலைப்பு மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்தார்: வீரலட்சுமி பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Seemane ,Vijayalakshmi ,Veeralakshmi ,Chennai ,Koyambedu ,Viralakshmi ,
× RELATED மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..!!