×

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ கர்னல், மேஜர், டி.எஸ்.பி பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் கரோலில் உள்ள கோகோரெனாக் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து செவ்வாய்கிழமை அவர்களை தேடும் வேட்டை தொடங்கியது. நேற்று காலையில் மீண்டும் அந்த பணியில் ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். 19 ராஷ்டிரிய ரைபிள்ஸின் கமாண்டிங் அதிகாரி கர்னல் மன்பிரீத் சிங் அந்த படையை வழிநடத்தினார். அதில் மேஜர் ஆஷிஷ் தோனாக் மற்றும் காஷ்மீர் காவல் படையை சேர்ந்த துணை கண்காணிப்பாளர் ஹுமாயுன் பட் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்த படையினர் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்ட போது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

பாதுகாப்பு படையினர் திருப்பிச்சுட்டனர். இருதரப்புக்கும் கடும் மோதல் நடந்தது. இதில் கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தோனாக், டிஎஸ்பி ஹூமாயுன் பட் ஆகியோர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட னர். இதில் அவர்கள் 3 பேரும் உயிர் இழந்தனர். மூத்த ராணுவ அதிகாரிகள், காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த பகுதியில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை பிடிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ கர்னல், மேஜர், டி.எஸ்.பி பலி appeared first on Dinakaran.

Tags : Terrorist attack ,Kashmir ,Army ,Colonel ,Major ,DSP ,Srinagar ,Kokorenak ,Karol ,Anantnag district ,Dinakaran ,
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி