×

சந்திரகிரி மாணவிகள் விடுதியில் 9ம் வகுப்பு மாணவியை ஆடைகள் கழற்றி கை, கால்களை பிடித்து விடும்படி சக மாணவி டார்ச்சர்

*பெற்றோர் போலீசில் புகார்

திருமலை : சந்திரகிரி மாணவிகள் விடுதியில் 9ம் வகுப்பு மாணவியை ஆடைகள் கழற்றி, கை கால்களை பிடித்து விடும்படி சக மாணவி டார்ச்சர் செய்ததால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் சந்திரகிரியில் அரசு மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இதில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இதில், ஜில்லா பரிஷத் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மணைவி விடுதியில் தங்கி உள்ளார்.

அதே விடுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவியும் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், 10ம் வகுப்பு மாணவி தன்னுடன் ஒரே அறையில் தங்கி இருக்கும் 9ம் வகுப்பு மாணவியின் ஆடைகளை கழற்றும்படி கூறி, கை, கால்களை பிடித்துவிடும்படி டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

இதனால், தொல்லை தாங்க முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 10ம் தேதி நள்ளிரவு விடுதியில் இருந்து எப்படியாவது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் மற்றொரு மாணவியை கொண்டு தலைமுடியை வெட்ட செய்துள்ளார். பின்னர், சக மாணவிகள் டார்ச்சர் செய்து தலைமுடியை கட் செய்ததாக கூறி விடுதியில் தங்க முடியாது என்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சந்திரகிரி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் இந்த விஷயம் தெரியவந்தது. இதுகுறித்து விடுதி வார்டன் வஹிமுதீனிடம் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

The post சந்திரகிரி மாணவிகள் விடுதியில் 9ம் வகுப்பு மாணவியை ஆடைகள் கழற்றி கை, கால்களை பிடித்து விடும்படி சக மாணவி டார்ச்சர் appeared first on Dinakaran.

Tags : Chandragiri Students Club ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...