×

பழநி அருகே கோம்பைபட்டி பகுதியில் 40 தென்னை மரங்களை சேதப்படுத்திய ஒற்றை யானை

*கவலையில் விவசாயிகள்

பழநி : பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரத்திற்குட்பட்ட மலையோர கிராமங்களில் கடந்த சில வருடங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் சோலார் மின்வேலி அமைத்தல், அகழி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பலனேதுமில்லை. பழநி அருகே கோம்பைபட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றை யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு கோம்பைபட்டியில் முன்னாள் ஊராட்சித்தலைவர் மனோகரன் என்பவரது தென்னந்தோப்பிற்குள் ஒற்றை யானை புகுந்தது.

அங்கிருந்த சுமார் 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. யானை சேதப்படுத்துவதை அறிந்த தோட்டத்தில் வசித்தவர்கள் கூச்சலிட்டு யானையை விரட்டினர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து வனத்துறையினர் ஒற்றை யானையை காட்டிற்குள் விரட்டி அடித்தனர்.

ஒற்றை யானை நடமாட்டத்தால் வனச்சரக எல்லையோர கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘‘யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கவும் பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் வனத்துறையினருடன்
, வேட்டை தடுப்பு காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சேதமடைந்த பயிர்களுக்கும், வீடுகளை இழந்த விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

The post பழநி அருகே கோம்பைபட்டி பகுதியில் 40 தென்னை மரங்களை சேதப்படுத்திய ஒற்றை யானை appeared first on Dinakaran.

Tags : Kombaipatti ,Palani ,Blahani ,Otansatra ,Paranani ,Dinakaran ,
× RELATED பழநி நகராட்சி மக்கள் கவனத்திற்கு