×

ஆந்திர முதல்வருக்கு வைகோ கோரிக்கை கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க வேண்டும்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த வெற்றி விசுவா என்பவர் சுச்னா மரைன் சர்வீஸ் என்ற கப்பல் நிறுவனத்தில் டெக் கேடட் ஆக பணிக்கு சேர்ந்து கிருஷ்ணபட்டணம் எம்.வி.பென்னா சுரக்‌ஷா கப்பலில் பணி செய்து வந்துள்ளார். கடந்த 7ம் தேதி இரவு 10 மணிக்கு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் தங்களுடைய பெற்றோருடன் பேசிய வெற்றி விசுவா, மறுநாள் விடியற்காலை 4 மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டி இருப்பதால் தூங்கச் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

செப்.8ம் தேதி காலை கப்பல் நிறுவன மேலாளர், வெற்றி விசுவாவின் பெற்றோருக்கு போன் செய்து, உங்கள் மகன் வேலைக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். தங்கள் மகன் நிலை குறித்து பெற்றோர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் கூறி அவரை மீட்டுத் தருமாறு கோரினர். இதுதொடர்பாக வைகோவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அதில் வெற்றி விசுவாவை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

The post ஆந்திர முதல்வருக்கு வைகோ கோரிக்கை கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Vaiko ,AP CM ,Chennai ,Victory ,Visua ,Thirunelveli Palayangota ,VICO ,Suchna Marine ,Vaigo ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...