×

பட்டாசு உரிமங்களை விரைந்து வழங்க வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பட்டாசு உரிமங்களை விரைந்து வழங்க வேண்டும் என்று தலைமை செயலாளரை நேரில் சந்தித்து விக்கிரமராஜா வலியுறுத்தினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தார்.

அப்போது அவர், தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பட்டாசு விற்பனை தடையில்லாமல் நடைபெறவும், பட்டாசு உரிமங்களை விரைந்து வழங்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்பின்போது பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, எஸ்.ராஜசேகரன், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.டி.எம்.முகமதுகனி, தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் ஒய்.எட்வர்ட், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ஏ.டி.கண்ணன், செயலாளர் ஜெ.எம்.எஸ்.சின்னப்பன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post பட்டாசு உரிமங்களை விரைந்து வழங்க வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Wickramaraja ,CHENNAI ,Chief Secretary ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தேர்தல் விதிமுறை தளர்வு வணிகத்தை...