×

களக்காடு அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து தந்தை, மகனுக்கு வலை

களக்காடு, செப்.13: களக்காடு அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய தந்தை, மகனை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வானுமாமலை மகன் முருகன் (41). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே ஊரைச்சேர்ந்த சுப்பையா மகன் அய்யாக்குட்டி (55) என்பவருக்கும் இடையே இடப்பிரச்னை தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இதில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு முருகனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனைதொடர்ந்து முருகனுக்கும், அய்யாக்குட்டிக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முருகன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அய்யாக்குட்டி, அவரது மகன் பாலசுப்பிரமணி (30) ஆகியோர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். மேலும் இருவரும் சேர்ந்து முருகனை கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த முருகன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக அய்யாக்குட்டி, அவரது மகன் பாலசுப்பிரமணி ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post களக்காடு அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து தந்தை, மகனுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Kalakkadu ,
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...