×

கயத்தாறு அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு 3 பேர் கோர்ட்டில் சரண்

கயத்தாறு, செப்.13:கயத்தாறு அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேர் தென்காசி கோர்ட்டில் சரணடைந்தனர். கயத்தாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட வில்லிசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மகேஸ்வரன் (23). இவர் நேற்று முன்தினம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியில் உள்ள மதுபான கடையில் மது குடிக்க சென்றிருந்தார். அப்போது அங்கு மது குடிக்க வந்த அதேபகுதியைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிபாண்டி(21) வாகைத்தாவூரைச் சேர்ந்த தர்மர் மகன்கள் சுபாஷ், சந்தனகுமார் என்பவர்களுக்கும் மகேஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே இசக்கிபாண்டி மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகேஸ்வரனை வெட்டினார். இதில் அவருக்கு கழுத்தில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. பின்னர் இசக்கிபாண்டி, சுபாஷ், சந்திரகுமார் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தவலறிந்து விரைந்து வந்த கயத்தாறு காவல் நிலைய போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மகேஸ்வரனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கிபாண்டி, சுபாஷ், சந்திரகுமாரை தேடி வந்தனர். இதற்கிடையில் அவர்கள் தென்காசி கோர்ட்டில் சரணடைந்தனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டப்பட்டது கயத்தாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கயத்தாறு அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு 3 பேர் கோர்ட்டில் சரண் appeared first on Dinakaran.

Tags : Kayathar ,Tenkasi ,Court ,Gayatharu ,Saran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...