×

கிறிஸ்தவ மத தலைவரை கொல்ல ஐஎஸ் தீவிரவாதி சதி: கோயிலில் கொள்ளையடிக்கவும் திட்டம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த ஜூலை மாதம் என்ஐஏ நடத்திய அதிரடி சோதனையில் திருச்சூரை சேர்ந்த அஷ்ரப் (36) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது தலைமையில் 4 பேர் இந்த இயக்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக கேரள கோயில்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அவருடன் தொடர்பில் இருந்த பாலக்காட்டை சேர்ந்த ராயிஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த கும்பலில் இருந்த திருச்சூரைச் சேர்ந்த நபீல், ஷியாஸ் ஆகியோர் தேடப்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் நபீல் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நபீல் கேரளாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு சமூக வலைதளமான டெலிகிராமில் ‘பெட் லவ்வர்ஸ்’ என்ற பெயரில் ஒரு குழுவை ஏற்படுத்தினார். இதன் மூலம் ஐஎஸ் இயக்கத்திற்கு இளைஞர்களை தேர்வு செய்து வந்துள்ளார். இந்த இயக்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக பாலக்காடு, திருச்சூரில் உள்ள கோயில்களில் கொள்ளையடிக்கவும் திட்டமிட்டு இருந்தார். மேலும் ஒரு கிறிஸ்தவ மத தலைவரை கொலை செய்யவும் சதித் திட்டத்தை தீட்டி வந்து உள்ளனர். இது தொடர்பாக மேலும் பலர் என்ஐஏவின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

The post கிறிஸ்தவ மத தலைவரை கொல்ல ஐஎஸ் தீவிரவாதி சதி: கோயிலில் கொள்ளையடிக்கவும் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Ashraf ,Thrissur ,NIA ,Kerala ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!