×

பணம் தராத ஆத்திரத்தில் பெண்ணின் ஆட்டோவை தீவைத்து எரித்த ரவுடி

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி (30), இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தி வைப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவில் ஆட்டோ தீப்பற்றி எரிவதாக அக்கம் பக்கத்தினர் கூறியதையடுத்து மீனாட்சி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து மீனாட்சி யானைக்கவுனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சவுகார்பேட்டை தண்ணித் தொட்டி தெருவைச் சேர்ந்த அஜித் (27), ஆட்டோவை தீவைத்து எரித்தது தெரிந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

The post பணம் தராத ஆத்திரத்தில் பெண்ணின் ஆட்டோவை தீவைத்து எரித்த ரவுடி appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Bandarbate ,Meenati ,Sawugarbate ,Dinakaran ,
× RELATED 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை...