×

கடைக்காரரை தாக்கிவிட்டு ஹெல்மெட் திருடிய 3 வாலிபர்கள் கைது

சோழிங்கநல்லூர்: அயனாவரம் பகுதியில் கடைக்குள் புகுந்து கடைக்காரரை தாக்கிவிட்டு, ஹெல்மெட் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டை பேகம் 3வது தெருவைச் சேர்ந்தவர் முகமது ரபிக் (65). இவர், அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் ஹெல்மெட் மற்றும் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 3ம் தேதி இவரது கடைக்கு போதையில் பைக்கில் வந்த 3 பேர், பழைய டயரை கொடுத்து ரூ.500 கேட்டுள்ளனர். அதற்கு முகமது ரபிக், பழைய பொருட்களை வாங்குவதில்லை எனக் கூறியுள்ளார். இதனால், அவர்கள் முகமது ரபிக்கை அடித்து கீழே தள்ளிவிட்டு கடையில் இருந்த 5 ஹெல்மெட்களை திருடிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து முகமது ரபிக் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், திருவேற்காடு திருமலை பாலாஜி நகரை சேர்ந்த ஜெகன் (22), அயனாவரம் குப்புசாமி நகரை சேர்ந்த முத்துப்பாண்டி (27), திருவேற்காடு பகுதியை சேர்ந்த சரத்குமார் (26) உள்ளிட்ட 5 பேர் ஹெல்மெட் திருடியது தெரிந்தது. இதையடுத்து, 3 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

The post கடைக்காரரை தாக்கிவிட்டு ஹெல்மெட் திருடிய 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chodanganallur ,Ayanawaram ,Dinakaraan ,
× RELATED கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில்...