×

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் குண்டாசில் கைது

செங்கல்பட்டு: கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேற குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்ட 4 வாலிபர்களை குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் துறையினர் முடிவு செய்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறி, கள்ள சாராய விற்பனை, பாலியல் தொழில் செய்தல் என பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 4 வாலிபர்களை செங்கல்பட்டு நகர போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

சென்னை கிழக்கு தாம்பரம் அருகே இரும்புலியூரை சேர்ந்தவர்கள் விவேக் (29), தனசேகர் (25), ராகுல் (27), மணிகண்டன் (34) ஆகிய 4 வாலிபர்களை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே,இரும்புலியூரை சேர்ந்த ரவுடி லோகேஷ் (28) என்பவரை நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்த வழக்கில், இந்த 4 பேர் தொடர்பு உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Tags : Kuntasil ,Chengalbatu ,Kundasil ,Brinkalputtu ,
× RELATED சேரன்மகாதேவியில் குண்டாசில் வாலிபர் கைது