
விழுப்புரம்: அவதூறு வழக்கில் அக்டோபர் 9ம் தேதி விசாரணைக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஆரோவில் பகுதியில் முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசு பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. அரசு வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக சி.வி.சண்முகத்துக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The post அவதூறு வழக்கு:அக். 9ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சி.வி.சண்முகத்துக்கு விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.