×

அரசு வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக சி.வி.சண்முகத்துக்கு நீதிபதி உத்தரவு

சென்னை: அரசு வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக சி.வி.சண்முகத்துக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 9ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சி.வி.சண்முகத்துக்கு விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஆரோவில் பகுதியில் முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசு பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு பதிவாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் கடந்த மார்ச் மாதம் அதிமுக பொதுக்கூட்டத்தில், அதிமுகவின் உடைய பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசையில் தற்போதைய தமிழாகி அரசையும், தமிழ்நாடு முதலமைச்சரையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார். இதனை கண்டித்து அரசு தரப்பில் விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.வி.சண்முகத்துக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் 25ம் தேதி முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

The post அரசு வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக சி.வி.சண்முகத்துக்கு நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Shanmugam ,Chennai ,Shanmughat ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...