×

உசிலம்பட்டியில் ஓய்வு பெற்ற வட்டாட்சியருக்கு அரிவாள் வெட்டு..!!

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்ற கருப்பையாவுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இடப் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற கருப்பையா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கருப்பையாவை தேனியை சேர்ந்த அரசு மருத்துவர் காயத்ரி மற்றும் அவரது உறவினர் கத்தியால் தாக்கினர். காயமடைந்த கருப்பையாவை உறவினர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தாக்குதல் தொடர்பாக உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post உசிலம்பட்டியில் ஓய்வு பெற்ற வட்டாட்சியருக்கு அரிவாள் வெட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Usilampatti ,Madurai ,Karupiya ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...