வருசநாடு, செப். 12: வருசநாடு அருகே பள்ளிக்கு செல்ல சாலைவசதி செய்து தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு அருகே தர்மராஜபுரம் மலைக்கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தின் அடிவாரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு அடிப்படை வசதியான சாலைவசதி, தெருவிளக்குவசதி, கழிப்பறை வசதி, நுழைவுகேட் வசதி இரவுகாவலாளி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பள்ளி மாணவர்கள் புலம்பி வருகிறார்கள். பள்ளி மாணவ மாணவியர் இருவருக்கும் அடிப்படை வசதிகள் அரசு செய்து கொடுப்பதில் தாமதம் நிலவுவதால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post வருசநாடு அருகே பள்ளிக்கு செல்ல சாலைவசதி வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.
