- ஈரோடு
- தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பு
- ஈரோடு முதன்மை கல்வி அலுவலர்
- தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம்
- தின மலர்
ஈரோடு, செப். 11: ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில மகளிர் அணி செயலாளர் ரமாராணி தலைமை தாங்கினார். டிட்டோ ஜாக் அமைப்பின் மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சரவணன், மணி, கோபாலகிருஷ்ணன், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் பங்கேற்று கோரிக்கை குறித்து பேசினார். இதில், பிஎட் பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதை கைவிட வேண்டும். ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித்திறனை பாதிக்கும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுவதும் கைவிட வேண்டும். ஈஎம்ஐஎஸ் பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தொடக்க பள்ளி ஆசிரியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
The post தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.