×

கூலி தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது

ஸ்பிக்நகர், செப். 12: முள்ளக்காடு ராஜிவ் நகர் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் ராசையா(38), கூலி தொழிலாளி. இவரது மாமியார் வீட்டில் மாரிமுத்து மகன் முகேஷ்(20), மாரியப்பன் மகன் பாலா(19), முருகன் மகன் ஆனந்தராஜ்(22), கல்யாணி அருண்(20) உள்ளிட்டோர் தகராறு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை ராசையா சத்தம் போட்டுள்ளார். இதனால் 4 பேரும் ராசையாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்த புகார்களின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி 4 பேரையும் கைது செய்தனர்.

The post கூலி தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Spiknagar ,Rasaiya ,Isakimuthu ,Rajiv Nagar, Mullakkad ,
× RELATED அத்திமரப்பட்டி -பொட்டல்காடு இடையே...