×

டூவீலரை கைவிட்டு திருடன் ஓட்டம்

 

வேடசந்தூர், செப். 12: வேடசந்தூர் யூசுப் நகர் 2வது தெருவில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் டூவீலரில் வந்து முத்துலட்சுமி என்பவரது வீட்டின் முன்பாக நிறுத்தியுள்ளார். பின்னர் தெருவில் இருக்கும் ஒவ்வொரு வீடாக நோட்டமிட ஆரம்பித்துள்ளார். அப்பொழுது தன் கணவர் வருகை்காக வீட்டின் வெளியே காத்திருந்த பெண் ஒருவருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதனால் அவர் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் சரவணன் என்பவரிடம் செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் வீட்டின் வெளியே உள்ள விளக்குகளை ஒளிரச்செய்தவுடன் அந்த மர்ம நபர் டூவீலரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார். தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் அங்கு வந்து டூவீலரை கைப்பற்றி மர்ம நபர் குறித்து விசாரிக்கின்றனர்.

The post டூவீலரை கைவிட்டு திருடன் ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,2nd street ,Vedasandur Yusuf Nagar ,Dinakaran ,
× RELATED திண்டுக்கலில் அறுந்து கிடந்த...