×

சமையல் செய்த போது தீப்பிடித்தது உடல் கருகிய பெண் உயிரிழப்பு

வல்லம், செப்.12: தஞ்சாவூர் அருகே ஆர்சுத்திப்பட்டில் மண்எண்ணெய் ஸ்டவ்வில் சமையல் செய்யும் போது ஆடையில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகே ஆர்சுத்திப்பட்டு வடக்கு தெருவை சேர்ந்த உத்திராபதி மகன் சிவசுப்ரமணியம் (46). இவரது மனைவி மஞ்சுளாதேவி (37). கடந்த 8ம்தேதி மஞ்சுளா தேவி ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது ஸ்டவில் இருந்த தீ அவரது ஆடையில் பற்றி எரிந்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த மஞ்சுளாதேவியை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மஞ்சுளா தேவி இறந்தார்.

The post சமையல் செய்த போது தீப்பிடித்தது உடல் கருகிய பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vallam ,Arsuthipat ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் அருகே மாட்டுச்சந்தை: 500 மாடுகள் விற்பனை